சுடும்

About

இந்தியாவில ஒரு இயக்குனர் திரைப்படம் எடுக்கின்றார். உடனே வேறு ஒரு உதவி இயக்குனர் அந்த இயக்குனர்மேல் வழக்கு போடுகிறார்.

சார் சார் இந்த படத்துடைய கதைக்கு சொந்தமானவன் நான் என்று.

வெளியிலிருந்து பார்க்க இது எப்படி ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாய் இருக்கிறதோ. அதைப்போலவே இப்போ இவங்களும் வேடிக்கை காட்டுறாங்கள். சன் தொலைக்காட்சியின் செய்திகள் இலங்கை தமிழ்மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. அதனால் அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் திரையிடும் திரைப்படங்களை புறக்கணிப்போம். என்கின்றனர்.

இப்படித்தான் இலங்கைத்தமிழர்களுக்காக நடிகர்சங்கம் நடத்திய உண்ணாவிரத போராட்ட நிகழ்வுக்கு அஜீத்தும்,அர்ஜீனும் வரமாட்டார்கள் என்று பேட்டி கொடுத்தார்களாம். உடனே இவர்கள் அவங்களுடைய திரைப்படத்தை புறக்கணிக்க சொல்லி அறிக்கை விட்டார்கள். அவர்கள் அப்படி சொன்னார்களா என்பது அடுத்த கேள்வி. அப்படி அவர்கள் சொல்லி இருந்தால்தான் அதில் என்ன தவறு இருந்திருக்க முடியும்? எப்போதுமே அடி வாங்கியவனுக்குதான் அந்த அடியின் வலி புரியும். அதை நேரில் பார்த்தவனே அந்த வலியை உணர்வது கடினம் எனில், அதை பார்காமல் எங்கோ இருந்தவனிடம் போய், என் வலி புரியவில்லையா என்று கேட்பது முட்டாள்தனமாகவே இருக்கும்.

எமது வலியை புரிந்துகொண்டு வந்து எம்மோடு நின்றால் அவன் மனிதன். இல்லையேனில் அவனை அப்படியே விட்டுவிட வேண்டாமா. அதைவிடுத்து அவனுக்கு சவால் விடுகிறார்கள். இங்கே சாவால்கள் விடப்படுவது எந்த நம்பிக்கை வைத்து என்பதுவும் ஒரு பெரிய கேள்விக்குறியே?

குறிப்பாக ஒரு நடிகருடைய படத்தை புறக்கணிக்கிறீர்கள். அந்தப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கிறதா? இல்லை ஒரு நடிகருடைய படத்தை ஓடவைத்து விடுகிறீர்கள். அது ஒரு பொரிய வெற்றியை பெற்று விடுகிறதா? ஒரு வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக நீங்கள் இருக்கிறீர்களா? சரி இதை புறக்கணியுங்கள் என்று முடிவெடுப்பது யார்? நாற்பது வயதை தாண்டிய நீங்களாக இருக்கலாம். ஆனால் அங்கே திரைப்படம் திரையிடப்படும் நாளில் போய் பாருங்கள். உங்கள் மகன்,மகள் முதல்வரிசையில். சில நாட்கள் கழித்து அதே திரைப்படம் உங்கள் வீட்டு தொலைக்காட்சிப்பெட்டியிலும் கூட..

இதை வம்புக்காக வேண்டுமெனில் மறுத்து பேசலாம். ஆனால் நியத்தை புரிந்து கொள்ளுங்கள். தமிழக பெண்கள் ஏன் ஆண்களும் கூட எப்படி சின்னத்திரை , பெரியதிரைக்கு அடிமையோ அதைப்போலவே நீங்களும், அடிமையாகி பல காலங்கள் கடந்துவிட்டன.

சன் தொலைக்காட்சியில் எங்களுக்கு எதிரான செய்திகள் வருகிறதா. அது தவறு என்று நாலு அல்லது நாற்பது மடல் எழுதுங்கள். அதைவிடுத்து உங்களாளேயே பின்பற்ற முடியாத சாவால்கள் எதற்கு. மேலைத்தேய நாடுகளில் உங்களுடைய பிள்ளைகளுக்கு "அந்த படத்தை பார்க போகாதே" என்று மட்டும்தான் சொல்ல முடியும். "இல்லை நான் போவேன்" என்றால் அடுத்து உங்களால் என்ன செய்ய முடியும். அடுத்த தலைமுறைக்கு சரிப்பட்டு வராத சவால்கள் எதற்கு? கடைப்பிடிக்க முடியாத சவால்களை கைவிட்டுவிட்டு வேறு சவால்களை போடலாம். உதாரணமாக இலங்கை உற்பத்தி பொருட்களை வாங்குவதில்லை என்பது போன்று.

அதை அழகாக கடைப்பிடிக்கலாம். ஏனேனில் வீட்டு பொருட்களை வாங்கும் பொறுப்பு அனேகமாக உங்களின் கைகளிலேயே இருக்கும். அதைவிடுத்து தமிழக சினிமாவோடு போடும் சவால்கள் அவர்களுக்கு உகந்ததல்ல என்பதைவிட அது எங்களுக்கு உகந்ததல்ல. எங்களுடைய போராட்டத்துக் உகந்ததல்ல. தமிழக அரசியல் தலைவர்கள் திரைத்துறையினருடன் மோதினார்கள். திரைத்துறையினர் அவர்களை திரையிலேயே கேவலப்படுத்தினார்கள். இன்றைய நிலையில் அது கேலிக்கூத்தாகிவிட்டது. இருவருமே கேலிப்பொருட்களாய் சந்தையிலே இன்றைய இளைஞர்களின் வார்த்தைகளிளே.

அதுபோல் ஆகிவிடக்கூடாது நாளடைவில் எமது போராட்டமும். பல உயிர்களை பறிகொடுத்து படிப் படியாய் முன்னேரிய போராட்டத்திற்கும், உரிமைக்கும் ஒரு தீவிரமான முகமே இருக்கட்டும். அதை கெடுக்கும் படியான இந்த சவால்கள் வேண்டாம் என்பதே எனது கருத்து.

உங்களுடையது ???????????

வணகமுங்கோ. நம்ம ஏ.ஆர்.ரமானுக்கு ஆஸ்கர் வர காரணமாயிருந்த பாடலை இந்த பொண்ணு எடுத்து ஏதோ செய்திருக்கு. பாத்திட்டு உங்க கருத்தை சொல்லீட்டு போங்கோ.











Pussycat Dolls - Jai Ho Lyrics :-
Jai Ho!
Jai Ho

I got shivers
When you touch of a (?)
I’ll make you hot, Get what you got,
I’ll make you wanna say
(Jai Ho, Jai Ho)

I got fever, running like a fire
For you I will go all the way
I wanna take you higher
(Jai Ho)

I keep it steady steady, that’s how I do it
This beat is heavy, so heavy you gonna feel it.

(Jai Ho)
You are the reason that I breathe (Jai Ho)
You are the reason that I still believe (Jai Ho)
You are my destiny
(Jai Oh) Oh-oh-oh

(Jai Ho)
No there is nothing that can stop us (Jai Ho)
Nothing can ever come between us (Jai Ho)
So come and dance with me
Jai Ho!

Catch me, catch me, catch me, c’mon, catch me,
I want you now,
I know you can save me, you can save me,
I need you now.
I am yours forever, yes, forever,
I will follow,
Anywhere in anyway,
Never gonna let go

Jai Ho!
Jai Ho!

Escape (escape) away (away),
I’ll take you to a place,
This fantasy of you and me
I’ll never lose my chance
(Jai Ho)

Mmmhh yeaahhhh .. hhmm yeaaaha

I can (I can) feel you (feel you),
Rushing through my veins
There’s an ocean in my heart
I will never be the same
(Jai Ho)

[Jai Ho lyrics on http://lyricsmusicvideo.blogspot.com ]
Just keep it burnin’, yeah baby, just keep it comin’ (Jai Ho)
You’re gonna find out baby, I’m one in a million

(Jai Ho)
You are the reason that I breathe (Jai Ho)
You are the reason that I still believe (Jai Ho)
You are my destiny
Jai Oh! Oh-oh-oh-oooooh

(Jai Ho)
No there is nothing that can stop us (Jai Ho)
Nothing can ever come between us (Jai Ho)
So come and dance with me
Jai Ho! (oohh)

Catch me, catch me, catch me, c’mon, catch me,
I want you now,
I know you can save me, you can save me,
I need you now.
I am yours forever, yes, forever
I will follow
Anywhere in anyway,
Never gonna let go

(Jai Ho)
Hmmm yaeaaaaahhh
(repeat 2x)

I need you, gonna make it
I’m ready, so take it

(Jai Ho)
You are the reason that I breathe (I breathe)
You are the reason that I still believe (still believe)
You are my destiny (destiny)
Jai Oh! Oh-oh-oh-ooooh

(Jai Ho)
No there is nothing that can stop us (can stop us)
Nothing can ever come between us
So come and dance with me,
Jai Ho! (oohh)

Jai Ho!
Bai-la bai-la!
Bai-la bai-la!
Jai Ho! Bai-la bai-la!
Jai Ho

இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான்.

சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ. பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ.

சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்துக்காக அவரும் இயக்குநர் பிரபு தேவாவும் புரமோனல் டூர் போனார்கள் அல்லவா...

அப்போது திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜய். அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள்.

குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை உருவாக்கப் பார்ப்பது ஏன்?' என ஒரு லோக்கல் சானல் நிருபர் கேட்டு வைக்க என்ன பதில் சொல்வதென்று யோசித்த விஜய், இடையில் தன் ரசிகர்களைத் திட்டி அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாராம்.

'ஏய்... பேசிட்டிருக்கோம்ல... சைலன்ஸ்...!' என அவர் போட்ட சவுண்டு, படத்தில் வில்லன்களை எதிர்த்து அவர் வழக்கமாக விடும் சவுண்டை விட அதிகமாக இருந்தது. விஜய்யின் கோபத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரபு தேவா மிரண்டு போய் பார்ப்பது வீடியோவில் தெரிகிறது.

பிரஸ் மீட் முடித்தபிறகு இந்த குறிப்பிட்ட காட்சிகளை வெளியிட வேண்டாம் என அன்பாகக் கேட்டுக் கொண்டாராம் விஜய்.

ஆனால் யாரோ ஒரு குறும்புக்கார கேமராமேன், இத்தனை நாட்கள் கழித்து அதை உலாவர வைத்துவிட்டார். விரைவில் முழு வீடியோவையும் வெளியிடப் போகிறாராம்.




இப்படி ஒரு தலைப்பை பார்த்தவுடன். ஆவேசத்துடன்  பதிவுக்கு வந்த எல்லோருக்கும் முதலில் வணக்கம். சமீபகாலமாக புலிகளின் பலம் தொட ர்பான பல கேள்விகள் எழுந்தவண்ணமே இருந்தது. அவற்றுக்கான பதிலை அந்த நேரங்களில் கணிப்பது மிகவும் கடினமான ஒரு விடயம் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான்.

ஆனால் இன்று.. அதற்கான பதில் ஓர் அளவு கிடைத்துவிட்டதாகவே நம்பலாம். ஆம்... புலிகளின் கடைசிக்காலம் எண்ணப்பட்டுகொண்டிருக்கிறது. (மரபு ரீதியாக போரடும் புலிகள்தான் இங்கே கணக்கில் கொள்ளப் படுகிறார்கள்.. கொரில்லாதாக்குதல்கள் இதன் அடுத்த பரிமாணம். ஏனேனில் ஒர் உரிமைப்போரை முழுவதுமாக எந்த ஒரு நாடும் ஒழித்துவிட முடியாது.) இதை நான் எதன் அடிப்படையில் கூறுகிறேன் என்றால். நேற்று புலிகளின் கொழும்பு நோக்கிய வான்தாக்குதல்களும் அதன் முடிவில் புலிகளின் வான் ஊர்திகளை புலிகளே இழந்தமையும் கொண்டு கூறலாம்.. ஆம் இலங்கை வான் படை கூறுவதுபோல புலிகளின் வான் ஊர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க மாட்டாது. மாறாக அவை தாங்களாகவே அழிக்கப்பட்டிருக்கும்.  

அதாவது புலிகளின் மொத்த வான் பலமும் பயன்படுத்தப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். எனேனில் இதற்கு மேலும் புலிகள் தங்களுடைய வான் படையை பாதுகாத்து கொள்ள முடியாத நிலை ஒன்று உண்டு. அதற்கு அவ ர்கள் அரச படைகளிடம் இழந்துள்ள பெரும் நிலப்பகுதியே முக்கிய காரணம்.

அது மட்டுமல்லாது வான் ஊர்தியானது வான் எழுவது சாத்தியமானது. வேக வேகமாக எழுந்து பறக்கலாம். ஆனால் அவ்வான் ஊர்திகளே தாக்குதலை முடித்த பின்னர் மீண்டும் தமது பழைய நிலையை அடைந்து பதுங்குவது என்பது முன்போல அவ்வளவு எழிதன்று. ஏனேனில் புலிகளுடம் தற்போது எஞ்சியிருப்பது வெறும் 100 கி.மீ பரப்பளவு பிரதேசமே. அதிக பிரதேசம் இருக்கும் பட்சத்தில் அவை அரச படைகளின் ரேடார்களுக்கு மண்ணை சுவிவிட்டு மாயமாய் மறையலாம். இப்போது அது சாத்தியமில்லை. எனவே. இது கடைசித்தாக்குதலாக இருக்கலாம்.


அரச படைகள் இரண்டு நாட்களுக்கு முன் கூறியதுபோல் புலிகள் தங்களுடைய வான் ஊர்திகளை தாங்களாகவே எரித்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் பயத்திலேயே அழியும் படு கோழைகளும் புலிகளில் இல்லை. தன் அழிவிலும் எதிரிக்க அழிவை கொடுக்க கூடிய வீராப்பை கொண்டவர்கள். உதாரணம் கரும்புலிகள். அதன்படியே அவர்கள் தங்களுடைய வான் படையில் அழிவிலும் எதிரிக்கு ஒரு அழிவை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்கள். 

வான் படையை காக்க முடியாத ஒரு சூழல் உருவாகும் போது. இப்படியான தாக்குதல்கள் வரவேற்கத்தக்கதே. எனினும் அரசபடைகளின் கூற்றுப்படி புலிகளின் கொடுத்த இந்த விலைக்கான (இரண்டு வான் ஊர்திகள்) விளைச்சல் மிக குறைவானதே ஆகும். அது மட்டுமல்லாது. தமிழ் மக்களின் முக்கியமாக புலம்பெயர்வாழ் மக்களின் மன உறுதியும் புலிகள் மேல் கொண்டுள்ள நம்பிக்கையும் மிகப்பெரிய கேள்விக்கூறியாகலாம். 

இப்படியான தொடர் இழப்புக்கள். அவர்களுடைய இயலாத தன்மையாக கணிக்கப்படலாம். அப்படி கணிக்கப்படின் அது மேலும் பல நெருக்குதல்களை புலிகளுக்கு கொடுத்து. அவர்களின் மரபுவழி சமருக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். போராட்ட வரலாறானது மீண்டும் ஆரம்ப காலத்துக்கே சறுக்கிச்செல்லாம்.  

வான்படை மூலம் தனது இயலாமையை வெளிக்காட்டிய புலிகள் எதிர்வரும் காலங்களில் மற்றைய படைகளினதும் இயலாமையை வெளிப்படுத்துவார்கள் எனில்.........................????????!!!!!!!!!!  என்ன சொல்ல...... மெல்லத் தமிழ் இனி சாகும்.





இல்லை இல்லை இலவசமாய்கூட கிடைக்கும் ஒரேயடியாய் சாவு வரும்போது.

செய்தி: முத்துக்குமார் தன்னை தீயிட்டு மாய்த்துக்கொண்டான்.

[இன்று]

திருமா: இலங்கையில் போரை நிறுத்தாவிடில் முத்துக்குமார் போன்ற பல முத்துக்குமார்கள் உருவாகுவார்கள்.


வைகோ: முத்துக்குமார் தன் மேல் இட்ட தீ தமிழ் மக்கள் மனங்களில் பற்றி எரிந்து பல போராட்டங்கள் வெடிக்கும்.


பழ.நெடுமாறன்: இவரது வீர மரணம் எம்மை ஆழ்ந்த வருத்தத்தில் தள்ளியுள்ளது.


ராமதாஸ்: முத்துகுமார் செய்தது போன்று யாரும் செய்யவேண்டாம்.

[நாளை]

கருணாநிதி: அயராது நாட்டு மக்களுக்காய் உழைத்தது என் உடலுக்கே பிடிக்கவில்லை. முதுகில் பிடித்துக்கொண்டது. மருத்துவ மனையில் மாண்டிருக்க வேண்டிய நான் மீண்டு வந்து விட்டேன். வாழ வேண்டிய தோழன் முத்துக்குமார் வீர மரணம் ஏய்தியது கண்டு மெளனிக்கிறேன் வருந்துகிறேன்.

சுப்பிரமணிய சுவாமி: ஒரு இந்தியன் அயல்நாட்டுக்காய் உயிர்கொடுத்திருக்கிறான். அவன் ஒரு இந்தியனா என்ற கேள்வி இங்கே எழுகிறது.

ஜெயலலிதா: முத்துக்குமார் என்ற தோழன் தானாக சாகவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு யார் காரணம் என்பது. எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் என்னுடைய ஆட்சிகாலத்தில் இதற்கு சரியான பதில் சொல்ல வேண்டி வரும்.


இப்படி அவுக சொல்ல நாம (மக்கள்) வாயில விரலை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்போம். நாம மவுனமா இருக்க அவங்களே மாறி மாறி கதைத்து கதையை முடித்து வைப்பாக.

நல்லா செய்யிறாங்கப்பா.....